மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி பள்ளத்தில் விழுந்து விபத்து
பொகவந்தலாவயில் பைனஸ் மரங்களை ஏற்றிச் சென்ற ஒரு லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(11) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், பலாங்கொடை, மாரதென்ன பகுதியிலிருந்து பைனஸ் மரங்களை ஏற்றி சென்ற குறித்த லொறியானது பொகவந்தலாவ வழியாக கண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து நிகழ்ந்தபோது, லொறியில் இருந்த ஓட்டுநரும் உதவியாளரும் திடீரென குதித்து உயிர் தப்பியதாக பொலிஸ் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் லொறி பலத்த சேதமடைந்ததுடன், பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri