அநுரவின் நகர்வு வடமாகாணத்தை நோக்கி தான்: கந்தசாமி பிரபு தெரிவிப்பு
வடக்கில் ஜனாதிபதியால் பல வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தி தான் அதிகமாக கிடைக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(10.02.2026) வெல்லாவெளியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மில்லியன் கணக்கான பணம் ஒதுக்கீடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த வருடம் 176 திட்டங்களுக்கு 151 மில்லியன் ரூபாய் நிதியை நாம் ஒதுக்கீ செய்திருந்தோம். கடந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் 100 வீதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் யானை மனிதன் மோதல் தொடர்பாக கடந்த பேசப்பட்டிருந்தன. அதற்காக எமது அரசாங்கத்தின் ஊடாக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான நிதியம் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வெல்லாவெளிப் பிரதேசத்திலே யானைப் பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடுகளை வழங்க தயாராக இருக்கின்றோம். வன ஜீவராசிக பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய அதிகாரிகளை நியமிக்கவும், அதிகாரிகள் மட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதம் மண் அகழ்வு தொடர்பாக நாங்கள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ள அனர்த்த காலத்தில் பாதிக்கப்பட்ட வாய்க்கால்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது அறுவடை செய்யப்படுகின்ற நெல் கொள்வனவு தொடர்பாக நாம் அதிக கரிசனை செலுத்தியுள்ளோம்.
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து பழுகாமத்தில் இருந்து களுதாவளைகான புதிய படகு பாதை போக்குவரத்து ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.
கிவுல் ஓயா திட்டம் தொடர்பான குடியேற்றங்கள்
இந்நிலையில், கிவுல் ஓயா திட்டம் என்பது ஒரு குடியேற்றத் திட்டம் இல்லை. அது ஒரு நீர்ப்பாசனத் திட்டமாகும். வடமாகாணத்திற்கு அதிகளவு நீர் தேவைகள் இருக்கின்றன. அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளன. அங்குள்ள பரந்த நிலப்பரப்புகளை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.
அதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் தேவையை சரியான முறையில் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இந்த கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக விவசாயிகள் நன்மை அடையக்கூடிய சூழல் ஏற்படும்.

அதனை நாங்கள் செயற்படுத்த தயாராக இருக்கின்றோம். கடந்த காலங்களில் கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்வதற்கு கொண்டு வந்த திட்டங்களை சட்டவிரோதமான குடியேற்றங்கள் இடம்பெற்று இருந்தன. இன பரம்பலை குழப்பத்திற்கு உள்ளான பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எமது அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளை நாங்கள் ஈடுபட மாட்டோம்.
வடபகுதி மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து இருக்கின்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே எந்த ஒரு மாவட்டத்திலும் அது கூடிய பெரும்பான்மையைப் பெற்ற மாவட்டமாக வட மாகாணம் காணப்படுகிறது.
மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு தான்..
அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு தான் கிடைத்திருந்தார்கள். அங்கு அந்த மக்களின் ஆதரவு தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி தான் இருக்கின்றது. அதிகளவு செயறிட்டங்களையும் வடமாகணத்தை நோக்கித் தான் ஜனாதிபதி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
இதனால் அப்பகுதியில் பல வீடு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே நல்லதொரு அபிப்பிராயம் ஜனாதிபதி மத்தியில் இருக்கின்றது. ஜனாதிபதியும் அந்த மக்களிடையே சிறந்த ஒரு நம்பிக்கையும் பாசத்தையும் வைத்திருக்கின்றார். வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் எந்தவித வேறுபாடுகளுமின்றி பயிற்சி அளிக்கப்பட்டு மாகாணங்களுக்கு அவர்கள் பகிர்ந்து அளிக்கப்படுவார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து ஆசிரியர் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாதவனை, மைலத்தமடு பிரதேசத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை நாம் விடுவிப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
அதன் முதற்கட்டமாக மகாவலி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 1400 ஏக்கர் காணியும் வெகு விரைவாக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதுபோன்று வன இலாகாவிற்குச் சொந்தமான காணியையும் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் கொண்டு இருக்கிறோம்.
வன இலாகா பிரிவு
ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல் தரைக்கான தேவையை வெகுவிரைவில் நாம் பூர்த்தி செய்வோம். கடந்த காலத்தைப் போன்று வன இலாகா எந்த ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து அரசு இயந்திரங்களையும் சுதந்திரமாக செயல்படுவதற்கு இடமளித்து இருக்கின்றது. நாங்கள் எந்த ஒரு அரசியல் தலையீடுகளையும் வழங்குவதில்லை.

அதுபோல் வன இலாகா அவர்களுக்கு இருக்கின்ற செயற்பாடுகளை அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தனியாருக்கு சொந்தமான காணியை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வன இலாகா பிரிவு ஈடுபடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுபோன்று வன இலாகா எல்லைகளை நிர்ணயிக்கும் போதும் அப்பிரதேசத்தில் இருக்கின்ற பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகள், விவசாயிகள் அனைவரையும், ஒன்று சேர்த்தாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எந்த ஒரு தவறுகளும் இடம்பெறாது என்பதை நான் ஆணித்தனமாக கூறிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.