சவூதி அரேபியாவுடனான நீண்டகால உறவுகள் வலுவாக மேம்படும்: இலங்கை
சவூதி அரேபியாவுடனான நீண்டகால உறவுகள் வலுவாக மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (27.02.2023) வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சவூதி தூதுக்குழுவினரை சந்தித்த பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கடந்த மாதம் ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணம்செய்தார். அதன்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து சவூதி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அபிவிருத்தி கடன்
இந்தநிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின்போது, இலங்கையில் திட்டங்களுக்குத் தொடர்ந்து நிதி உதவி வழங்குவதாகச் சவூதி அரசு உறுதியளித்துள்ளது.
இதுவரை, இலங்கைக்கு 425 மில்லியன் டொலர் மதிப்புள்ள குறைந்தது 15 அபிவிருத்தி கடன்களைச் சவூதி வழங்கியுள்ளது.
அத்துடன், கிழக்கு இலங்கையில் ஒரு பாலம் நிர்மாணிக்க 5.4 மில்லியன் டொலர்களை சவூதி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
