பிரித்தானியா - ஹறோ ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் தேர் திருவிழா
பிரசித்தி பெற்ற லண்டன் - ஹறோ பதியினிலே மந்திர சிம்மாசனத்தில் வீற்றிருந்து கேட்பவருக்கு கேட்டபடி வேண்டும் வரங்களை தந்தருளி அருளாட்சி செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா கடந்த (28.08.2023) திங்கட்கிழமை ஆரம்பமானது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ விழாவின் தேர் திருவிழாவானது இன்று (10.09.2023) காலை 8.00 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் தொடர்ந்து பகல் 9.45 மணியளவில் இடம்பெறவுள்ளது.
எம்பெருமான் தேரானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பின்னர் சுவாமி பச்சை சாத்துதல், பஞ்சமுக அர்ச்சனை, பிராயச்சித்த அபிசேக பூஜை, பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |