யாழ். மாவட்ட செயலகத்தின் இரு கிளைகளுக்கு பூட்டு - பலர் தனிமைப்படுத்தலில்
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபனுக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட செயலகத்தின் இரு கிளைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
அத்துடன் 22 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தின் நிர்வாகக் கிளை மற்றும் ஸ்தாபனக் கிளை ஆகிய பகுதிகளே முழுமையாக இழுத்து மூடப்பட்டு இங்கு பணியாற்றும் சகல பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாவட்ட மேலதிக அரச அதிபருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களிடம் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்ட செயலகத்தின் பல கிளைகளின் உத்தியோகத்தர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் 450 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள்
பணியாற்றுகின்றபோதும் இன்று 100 பேர் மட்டுமே பணிக்குச் சமூகமளித்திருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri