உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விரைவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிப்பற்றாக்குறை
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
எனினும், போதியளவு நிதி இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது அரசாங்கம் தேர்தலை நடத்தாமை தவறான செயல் என நீதிமன்றம் அறிவித்திருந்ததுடன் உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |