அடுத்த மாதத்திற்குள் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கட்டண திருத்தம் - வெளியாகியுள்ள தகவல்
சர்வதேச நாணய நிதியத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்னர், 25 பில்லியன் ரூபாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மின்சார கட்டணங்களை திருத்த வேண்டும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மதிப்பாய்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் அனுப்பப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டு நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் நிலை ஒப்பந்தம் இரண்டு நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது, அவற்றில் ஒன்று மின்சார செலவை மீட்டெடுப்பது மற்றும் மின்சார கட்டண பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது என்பனவாகும்.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் நிபந்தனைகள் மற்றும் ஒப்புதலுக்குப் பிறகுதான், இலங்கை சுமார் 344 மில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை விடுத்து, திட்டங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் அத்துடன், பிற நாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவது போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பிற பொருளாதார நிறுவனங்களின் மதிப்பீடுகள் குறையக்கூடும், மேலும் இது நாட்டிற்குள் வரும் முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri