சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Election Commission of Sri Lanka Sri Lanka Election
By Mayuri Apr 01, 2025 09:12 AM GMT
Report

புதிய இணைப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் பல கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவை தொடர்பான வழக்குகள் இன்று கொழும்பில் உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் அலை மோதின.

இன்று உயர்நீதிமன்றம் அத்தகைய 41 மனுக்களைப் பரிசீலனைக்கு எடுத்த அதே நேரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் பத்துக்கு மேற்பட்ட மனுக்கள் ஆராயப்பட்டன.

இரண்டு நீதிமன்றங்களிலும் இத்தகைய தேர்தல் ஆட்சேபனை தொடர்பான ரிட் மனுக்களை விசாரணை செய்வதற்கு நியாயாதிக்கம் எந்த மன்றுக்கு உரியது என்பது தொடர்பான சட்டச் சர்ச்சை கவனத்தில் எடுக்கப்பட்டது.

இரண்டு நீதிமன்றங்களிலும் இந்த நியாயாதிக்கம் தொடர்பான விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் முரண்பாடான நிலைப்பாடு எடுத்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டமையை அடுத்து அந்த மன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆட்சேபனை வழக்குகள் தொடர்பாக, அந்தந்தச் சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முன்னெடுப்பதற்கு ஒரு நாள் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

பலஸ்தீனர்களின் அனுமதியில்லாமல் இஸ்ரேலில் எந்த விமானமும் பறக்கமுடியாது!!

பலஸ்தீனர்களின் அனுமதியில்லாமல் இஸ்ரேலில் எந்த விமானமும் பறக்கமுடியாது!!

ரிட் மனுக்கள் 

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் துரைராஜா, மஹிந்த சமயவர்த்தன, சம்பத் விஜயரட்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் எடுக்கப்பட்டன.

அப்போது தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்படும் என்பதைச் சுட்டிக்காட்டிய சட்டமா அதிபர் தரப்பு, இந்த வழக்குகளில் தீர்மானங்களை எடுத்தவர்கள் மாவட்ட ரீதியான தெரிவத்தாட்சி அலுவலர்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான ரிட் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட முடியாது, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்ற பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்து வாதிட்டது.

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Local Government Election Sri Lanka

தேர்தல் ஆட்சேபனை வழக்குகளைத் தாக்கல் செய்த தரப்புகள் அந்தக் கருத்தை எதிர் வாதத்தினால் மறுத்தன. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளாகவே செயற்படுவதால் இது தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கு, அத்தகைய ரிட் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ள ஏற்பாடு என அவர்கள் சுட்டிக்காட்டினர். மேற்படி சட்டமா அதிபரின் பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பாக இரண்டு தரப்பினரும் செய்த சட்ட வாதங்கள் தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணத்தை நாளை புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதியரசர்கள் வழக்கை அடுத்த நாள் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இதே சமயம் இளையோரின் வயதை உறுதிப்படுத்தும் பிறப்புச் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி தொடர்பாக தேர்தல் திணைக்களம் எடுத்த தீர்மானம் சரியானது, அதில் மாற்றமோ, விட்டுக்கொடுப்போ, இரு தரப்பு இணக்கமோ ஏற்படவில்லை என்பதை சட்டமா அதிபர் தரப்பு இன்று நீதிமன்றத்தில் கோடி காட்டியது.

அதனால், இந்த ரிட் மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் தரப்பு முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் நிராகரித்தாலும், வழக்குகளில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இணக்கமான தீர்வு கிட்ட வாய்ப்பில்லை என்றும், சம்பந்தப்பட்ட தரப்புகள் வாதாடி, இறுதியில் மன்றின் முடிவை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டது.

இதேசமயம் இத்தகைய தேர்தல் ஆட்சேபனை வழக்குகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் அதன் பதில் தலைமை நீதியரசர் லபார் மற்றும் நீதியரசர் கே.பிரியந்த பெர்னானண்டோ ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சட்டமா அதிபர்

அச்சமயம் அங்கு ஆஜரான சட்டமா அதிபர் தரப்பு, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் மட்டுமே பரிசீலிக்கப்பட முடியும், இந்த நீதிமன்றத்துக்கு அந்த நியாயாதிக்கம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Local Government Election Sri Lanka

அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு, இதற்கு எதிரான தலைகீழான வாதத்தை அதே சமயத்தில் உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தரப்பு முன்வைப்பதாகச் சுட்டிக்காட்டினர். அதனைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த விடயத்தில் எந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உள்ளது என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் விட உயர்வான உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு விட்டு, அதன் முடிவைப் பெற்றுக்கொள்வதே பொருத்தமானது எனக் கருதி, தன்னுடைய வழக்கு விசாரணையை அதுவரை – நாளை வரை – ஒத்திவைத்தது.

அதுவரையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பான உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நாளை மீண்டும் எடுக்கப்படும் என்றாலும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை எதிர்பார்த்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளைய விசாரணையை ஓரிரு நாள் தள்ளிப் போடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

செய்தி ராகேஷ்

முதலாம் இணைப்பு

சில உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதிய வாகனம் வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு: கட்டாயமாக்கப்படும் நடைமுறை

புதிய வாகனம் வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு: கட்டாயமாக்கப்படும் நடைமுறை

குறித்த வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Local Government Election Sri Lanka

தொடருந்து சேவைகளில் தடங்கல்..!

தொடருந்து சேவைகளில் தடங்கல்..!

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US