மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம்
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் (28) மாலை தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.
பதவி பிரமாணம்
ஊரின் மறுமலர்ச்சியை நோக்கி எனும் தொனிப்பொருளில் மன்னார் நகரசபை, பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
குறிப்பாக இம்முறை மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட 11 நபர்கள் நேரடியாக வட்டார ரீதியாக வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் 8 உறுப்பினர்கள் போனஸ் ஆசனம் மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த சத்திய பிரமாண நிகழ்வில் பிரதி அமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 23 மணி நேரம் முன்

Optical illusion: இந்த படத்தின் சூழ்ச்சியை தாண்டி உங்கள் கண்களுக்கு தெரியும் இலக்ககங்கள் என்ன? Manithan
