தேர்தல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடையும்: நிதி அமைச்சின் செயலாளர்
தேர்தல் காரணமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி, ஓய்வுப்பெற்ற இராணுவ கேர்ணல் தாக்கல் செய்த நீதிப்பேராணை மீதான விசாரணையின் போதே நிதி அமைச்சின் செயலாளர் இக்கருத்தினைத் கூறியுள்ளார்.

நிதி திரட்டுவது சவால்
அத்தியாவசிய சேவைகளுக்கான நிதியைக் கூட செலுத்த முடியாத நிலையில், தேர்தலுக்கான நிதியை திரட்டுவது திறைசேரிக்கு கடும் சவாலான விடயம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச கடன் தரப்படுத்தலில் இலங்கை பின்னிலையில் உள்ளதால் சர்வதேச சந்தையில் இருந்து நிதி பெறுவது சிரமமான விடயம் என செயலாளர் உயர்நீதிமன்றத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam