உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்! நீதிமன்றத்தின் தீர்மானம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
மனு தாக்கல்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியவர்களினால் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மற்றைய மனு தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
