இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகோதரர் ஈ.பி.டிபி. கட்சியில் இணைவு!
ஈ.பி.டிபி. கட்சியில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் அவர்களின் ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளதாக ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டிபி. கட்சியில் இனைந்தவர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு கிழக்கு மாகாண ஊடக மன்றத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வடக்கு கிழக்கில் வீணைச் சின்னத்தல் தேர்தலில் போட்டியிடும்.
இந்நிலையில் எமது கட்சிக்கு நீண்டகாலமாக ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் முதன்மை வேட்பாளராக களமிறங்கிய ந. சுந்தேரேசன் அவரின் ஆதரவாளர்களுடன் ஈபி.டி.பி. கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்துள்ளார்.
அவ்வாறே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரரான சதாசிவம் மயூரன் மற்றும் இராஜாங்க அமைச்சரின் ஆதரவாக செயற்பட்ட இளைஞர்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் சுஜேச்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
எனவே எமது கட்சி ஒரு சுதந்திரமான கட்சி அனைவரும் வந்து இனைந்து செயற்படலாம் என்பதுடன் தற்போது இளைஞர்கள் இனைந்து வருகின்றதுடன் மாவட்டத்திலுள்ள 10 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதுடன் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்” என்றார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
