வடக்கில் பல கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Sri Lankan Tamils Northern Province of Sri Lanka
By Parthiban Dec 02, 2023 08:30 PM GMT
Report

வடக்கில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரமான கரையோரப் பகுதியை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கொந்தளிப்பில் உள்ளதாக வடமாகாண முன்னாள் மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மெலும் கருத்து தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சங்கானை மாவட்ட செயலகத்திற்குட்பட்ட அராலி முதல் பொன்னாலை வரையான கரையோரம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம், சங்கானை பிரதேச செயலத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள்

கடற்கரையை உள்ளடக்கியதாக சுமார் 10 கிலோமீற்றர் நீளமுள்ள நிலப்பரப்பை வன பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அந்த பிரதேச மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.

வடக்கில் பல கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு | Livelihoods Of Fishing Families Affected

அந்த மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வியலும் இந்த கரையோரத்தில்தான் தங்கியுள்ளது. ஒதுக்கப்படும், அராலி மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய கரையோரப் பகுதிகள், வட்டு தெற்கு கரையோரப் பகுதி, பொன்னாலை மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகள் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

சுமார் 10 கிலோமீற்றர் தூரம் இதில் உள்வாங்கப்படவுள்ளது. வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள பிரதேசத்தில் மக்களின் பொது இடங்களும் உள்ளடங்குகின்றது.

முற்றுமுழுதாக இந்த பிரதேசத்தில் கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் சுடுகாடுகள் அங்கு காணப்படுகின்றன.

கால்நடைகளுக்கு ஏற்படும் அவலநிலை : மயிலத்தமடுவில் இடம்பெறும் அராஜகம் (Video)

கால்நடைகளுக்கு ஏற்படும் அவலநிலை : மயிலத்தமடுவில் இடம்பெறும் அராஜகம் (Video)

திணைக்களம் முன்வைத்துள்ள பிரேரணை 

விளையாட்டு மைதானங்கள், விவசாயம் செய்யக்கூடிய இடங்கள் எல்லாம் இதில் உள்ளடங்குகின்றன. ஆகவே மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை முடக்கும் வகையில் இந்த முன்மொழிவு அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு பிரேரணையை வனப் பாதுகாப்பு திணைக்களம் முன்வைத்துள்ள நிலையில், காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும், உண்மைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், வடமாகாண முன்னாள் உறுப்பினர் வெளிப்படுத்திய விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

வடக்கில் பல கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு | Livelihoods Of Fishing Families Affected

வனப் பாதுகாப்பு திணைக்களம் முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பில் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படப்போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.

சாதாரண மக்களின் ஒப்புதல் இல்லாமல் இதைச் செய்ய முடியாது. இது வர்த்தமானி அறிவித்தலோ, கையகப்படுத்தும் அறிவித்தலோ அல்ல இதுவொரு முன்மொழிவு மாத்திரமே.

இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை ஆரம்பித்துள்ளேன். இதுதான் நடந்தது. வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் காணியை கேட்பதால் வழங்க முடியாது.

பொது மக்களின் ஒப்புதலுடன் மாத்திரமே இது சாத்தியமாகும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் பலவந்தமாக சுவீகரித்ததாக கடந்த காலங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US