எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ வெளியிட்ட தகவல்
நாடு முழுவதும் இன்று (22) 100,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த எரிவாயு கொள்கலன்களில் 70,000 எரிவாயு கொள்கலன்கள் கொழும்பிற்கு வெளியே உள்ள ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் எனவும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயுவை வழங்க முடியும்" எனவும் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவசர நிவாரண வேலைத்திட்டம்
மேலும், பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| ரணிலின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள்! அநுர அழைப்பு |
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam