லிஸ்திரியா நோய் தொற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
லிஸ்ட்டியோரிஸிஸ் அல்லது லிஸ்திரியா எனப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் இந்த நோய்த் தொற்று பரவுகை அபாயம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள கடையொன்றில் பெண் ஒருவர் லிஸ்திரியா நோய் அறிகுறியுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொற்று நோய்த் தடுப்பு பிரிவின் அறிவிப்பு

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இரண்டு யாத்ரீகர்கள் உயிரிழந்த போது அவர்களுக்கு லிஸ்திரியா தொற்று பரவியிருக்கலாம் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், அந்தப் பகுதிகளுக்கு சென்று உணவு மற்றும் நீர் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் எனவும் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri