லிஸ்திரியா நோய் தொற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
லிஸ்ட்டியோரிஸிஸ் அல்லது லிஸ்திரியா எனப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் இந்த நோய்த் தொற்று பரவுகை அபாயம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள கடையொன்றில் பெண் ஒருவர் லிஸ்திரியா நோய் அறிகுறியுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொற்று நோய்த் தடுப்பு பிரிவின் அறிவிப்பு
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இரண்டு யாத்ரீகர்கள் உயிரிழந்த போது அவர்களுக்கு லிஸ்திரியா தொற்று பரவியிருக்கலாம் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், அந்தப் பகுதிகளுக்கு சென்று உணவு மற்றும் நீர் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் எனவும் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri
