இராணுவத் தலைமையகத்தில் இருந்து காணாமல் போயுள்ள பெயர்ப்பட்டியல்
இலங்கை இராணுவ (Sri Lanka Army) தலைமையகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த பெயர்ப்பட்டியல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பான விபரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர விசாரணை
எனினும், ரஷ்ய-உக்ரைன் (Russia - Ukraine) போர் முனைக்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்பிய மோசடி தொடர்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலே குறித்த பெயர்ப்பட்டியலை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பெயர்ப்பட்டியலைத் திருடிய சம்பவம் தொடர்பிலும், ரஷ்ய -உக்ரைன் போர்முனைக்கு இராணுவத்தினரை அனுப்பிய விவகாரம் குறித்தும் கைது செய்யப்பட்டுள்ள மேஜர் ஜெனரலிடம் தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
