காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க வேண்டும் -டயனா கமகே
காலை 9 மணிக்கு மதுபானத்தை பெற்றுக்கொள்ள எவரும் வருவதில்லை எனவும் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்கி, அறுவடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுசரணையில் இதனை செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தை கடன் சுமையில் இருந்து தப்பிக்க பயன்படுத்த வேண்டும்.
இலங்கை என்பது சுற்றுலா சொர்க்கம். மதுபான விற்பனை நிலையங்களை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைக்க வேண்டும். நாட்டு மக்கள் நாள் கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை செலவிட சந்தர்ப்பம் இல்லை.
இதனால், இரவு நேர பொருளாதாரம் என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்த வேண்டும். இவை நாட்டை முன்னேற்றக் கூடிய வழிகள் எனவும் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான டயனா கமகே 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri