'சிம்பா' சிங்கக்குட்டியை பார்வையிட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு(Video)
'சிம்பா' என பெயரிடப்பட்டுள்ள, சிங்கக்குட்டியை தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் 'சிம்பா' என பெயரிடப்பட்டு மிகவும் அன்பாக வளர்க்கப்படுகின்றது என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளார்.
தெஹிவளை பூங்காவில் சிம்பா
ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது.
பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்கள் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வரும் சிம்பா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
