இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய எரிபொருள் நிறுவனம்!
இலங்கை மின்சார சபைக்கு மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தொடர்பில் மின்சக்தி அமைச்சு விடுத்த கோரிக்கையை லங்கா இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் நிராகரித்துள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தற்போது கூடுதல் எரிபொருள், தமது கையிருப்பில் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தடையற்ற மின்சார விநியோகத்தை பேணுவதற்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இன்று மின்சக்தி அமைச்சு மற்றும் இந்திய எரிபொருள் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது இது தெரிவிக்கப்பட்டது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனவரி 22 ஆம் திகதி வரை மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இலங்கை மின்சார சபை, இந்திய எரிபொருள் நிறுவனத்திடம் கோரும் என அமைச்சர் லொக்குகே முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அமைச்சின் கோரிக்கையை, இந்திய எரிபொருள் நிறுவனம் நிராகரித்த போதிலும், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் தாங்கியில் இருந்து எரிபொருளை பெறுவதற்கு தேவையான வசதிகள் இன்றைய தினத்திற்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் மத்திய வங்கி ஆளுநரிடமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த எண்ணெய் தாங்கியில் இருந்து எரிபொருளை வழங்க முடியாவிட்டால், சுமார் 90 நிமிடங்களுக்கு மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மின்சாரத்துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு - சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரமே, டீசல் கையிருப்பு! முழுமையாக இருளில் மூழ்குமா இலங்கை?


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 5 மணி நேரம் முன்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ரஷ்யாவுக்கு சவால் விடும் வகையில்.. வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய ஏவுகணை! News Lankasri

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022