புளொட் கட்சியிலிருந்து விலகுவதாக லிங்கநாதன் அறிவிப்பு

Jaffna Vavuniya People's Liberation Organisation of Tamil Eelam
By Thileepan May 20, 2025 10:41 AM GMT
Report

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் கட்சியின் முக்கியஸ்தர்  ஜி. ரி. லிங்கநாதன் அந்தக் கட்சியின் அனைத்து செயற்பாட்டில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தினை அவர் கட்சி செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கீழ் வரும் காரணங்களை மையமாக வைத்து தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அமைப்புக்களிலிருந்தும் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளிலிருந்தும் விலகிக் கொள்கின்றேன்.

இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் கைதான பிரித்தானிய யுவதிகள்: உருவாகியுள்ள சந்தேகம்

இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் கைதான பிரித்தானிய யுவதிகள்: உருவாகியுள்ள சந்தேகம்

கட்சியிலிருந்து விலகல்

கழகத்தின் சொந்த அரசியல் போக்குகளில் இயங்கிக் கொண்டிருந்த முன்னணி தோழர்கள் வாக்கு அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கியதன் பின்னர் அதுவரை கொண்டிருந்த தார்மீகங்களையும், தத்துவங்களையும் கைவிட்டு ஈழப்பிரச்சனையை தங்கள் சுயநலன்களுக்காக பாவிக்க ஆரம்பித்தனர்.

புளொட் கட்சியிலிருந்து விலகுவதாக லிங்கநாதன் அறிவிப்பு | Linganathan Announces Resignation From Plot

அதன் தொடர்ச்சியாக தமிழீழ மக்கள் விடுதலை கழகம் சார்ந்த எமது தோழர்கள் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுடைய கொலைகள் தொடர்பாக கழகமானது ஒரு விசாரணைக் குழுவை நியமித்திருந்த போதும், அவ்விசாரணைக் குழுவானது பின்னர் கலைக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன். எமது தோழர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை அறிந்துகொள்ள முடியாமல் போனதுடன் கழகத்தின் தலமைக்குழு உறுப்பினர்களிடமிருந்து எனது கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காத காரணத்தினால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.

கழகத்தின் தலைவர்கள் பேசிய ஜனநாயகம், இடது அரசியல், நுண்ணரசியல் போன்ற அறிவுச் செயற்பாடுகள் எல்லாம் காணாமல் போய் அவர்கள் வெறும் உணர்வுகளால் இயக்கப்பட்டார்கள். இதன் காரணமாக கழகத்தில் கேள்வி கேட்ட என்னைப் போன்ற தோழர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.

அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சொத்துக்கள் கடந்த 26 ஆண்டுகளாக கழகத்தின் முன்னணி உறுப்பினர்களால் முறையற்ற விதத்தில் தனிப்பட்ட ரீதியில் கையகப்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பான கணக்கறிக்கைகளோ ஆவணங்களோ அமைப்பில் இல்லை. சொத்துக்களும் இல்லை. இதற்கான பதிலும் கழகத்தின் முன்னணி தோழர்களால் வழங்கப்படாத காரணத்தினால் தொடர்ந்தும் கழகத்தில் பயணிப்பதற்கு எனது சுயகௌரவம் இடங்கொடுக்கவில்லை.

தேசபந்துவை கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தேசபந்துவை கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரசியல் சுயலாபம்

கடந்த காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகமானது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டு 1994 ஆம் ஆண்டு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது. அத்துடன் வவுனியா நகரசபை, சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் நங்கூரம் சின்னத்தில் கைப்பற்றியிருந்தது. யாழ்ப்பாணம் மாநகரசபையில் அதே ஆண்டு எதிர்க்கட்சியாக மாணிக்கதாசன் தலைமையில் கழகம் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை தலைவராக தெரிவு செய்யப்பட்டு எனது தலைமையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

புளொட் கட்சியிலிருந்து விலகுவதாக லிங்கநாதன் அறிவிப்பு | Linganathan Announces Resignation From Plot

இருந்தபோதும் கழகத்தின் முன்னணி தலைவர்கள் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக மக்களைபற்றிய சிந்தனையற்றவர்களாக வாக்குகளை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு வீட்டு சின்னம், குத்து விளக்கு சின்னம் மற்றும் சங்கு சின்னம் என காலத்திற்கு ஏற்றவகையில் மாறிக்கொண்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினையும் அதன் அரசியல் சித்தாந்தத்தினையும் நீர்த்துபோகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் வெற்று உணர்ச்சி அரசியலானது ஈழத்தமிழருக்கான எதையும் அரசியல்களத்தில் சாதிக்க வல்லமையற்றது என தெரிந்து குறுந்தேசிய அரசியலிலிருந்து விலக ஆரம்பித்துள்ளேன். எதிர்காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஸ்தாபகரும், செயலதிபர் க.உமாமகேஸ்வரன் மற்றும் புதியபாதை சுந்தரம் ஆகியோரின் பொது உடைமைவாத சிந்தனைக்கு அமைவாக கழகம் இயங்கினால் நான் தொடர்ந்து பயணிப்பேன்.

ஆனால் தற்சமயம் இருக்கும் தலைமையானது தானாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதுடன் தற்போது இருக்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையை நான் நிராகரிக்கிறேன். எனது இந்த நிலைப்பாடானது, சில தோழர்களுக்கு கசப்பானதாக இருக்கலாம். என் மீது அவதூறுகள் அள்ளி வீசப்படலாம்.

நான் ஒரு போராளியாக எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தேன் என்பதே உண்மை, அதனால் ஒரு போதும் நான் கலங்கி நிற்கப்போவதுமில்லை, என் தேசத்தை விட்டு ஓடப்போவதுமில்லை. என்னை நம்பியுள்ள தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் உண்மையாக பொதுவுடமை அரசியல் சித்தாந்தத்தில் பயணிப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US