சுரேஷ் சலேயின் மனைவி - பிள்ளைகள் எங்கே! அரசியல்வாதிகள் தலைமறைவு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
அவர், சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அண்மையில் அவரின் குடும்பத்தினர் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.
சுரேஷ் சலே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகார்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் மனைவி ஊடக பரப்பில் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.
சலேவின் தாய் மற்றும் மகன் உட்பட அவரின் குடும்பத்தினர், ஊடகங்களுக்கு முன்னிலையில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்நதனர்.
இந்நிலையில், சமீப காலமாக அவர்களில் யாரும் பெரிதாக எவ்வித வெளிப்பாடுகளையும் முன்வைத்து வருவதில்லை. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்னும் கேள்வி எழும் அளவுக்கு அமைதியாக உள்ளனர்.
இதற்கான காரணம் தான் என்ன? இது தொடர்பில் பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam