மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்
மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தினர் போராட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (20) பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த போராட்ட ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீதி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்திருந்த போதும் அவர்களை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை.
போராட்டம்
எனவே அவர்களை நிரந்தரமாக்குமாறு கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஒன்று கூடிய வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வரும் ஊழியர்கள் பகல் 12.00 மணிக்கு ஒன்று திரண்டு அனைத்து தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கு, 14 நாள் மருத்துவ லீவு வழங்கு, ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாங்கள் மாற்றத்திற்காக வாக்களித்தாலும் இதுவரையில் எங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லையெனவும் இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கான மாற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, அரசாங்கம் தமது கோரிக்கைகளை செவிமடுக்காமல் விடுமானால் அடுத்த மாதம் கொழும்பில் கூட பெரும் போராட்டத்தினை நடாத்த தயாராகி வருவதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த போராட்டம் 1.00 மணிவரை இடம்பெற்ற பின்னர் போரட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
