நுவரெலியாவில் சொகுசுக் கார் ஒன்றின் மின்குமிழ்கள் திருட்டு
நுவரெலியா (Nuwara Eliya) - கொட்டக்கலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசுக் கார் ஒன்றின் முகப்பு மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் நேற்று (23.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரானது, உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மைதானம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே காரில் இருந்த மின்குமிழ்கள் திருடப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், இந்த முகப்பு மின்குமிழ்கள் இரண்டினதும் தற்போதைய சந்தைப் பெறுமதி 350,000 ரூபாய் என உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் திம்புள்ள - பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி - திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
