நுவரெலியாவில் சொகுசுக் கார் ஒன்றின் மின்குமிழ்கள் திருட்டு
நுவரெலியா (Nuwara Eliya) - கொட்டக்கலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசுக் கார் ஒன்றின் முகப்பு மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் நேற்று (23.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரானது, உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மைதானம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே காரில் இருந்த மின்குமிழ்கள் திருடப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், இந்த முகப்பு மின்குமிழ்கள் இரண்டினதும் தற்போதைய சந்தைப் பெறுமதி 350,000 ரூபாய் என உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் திம்புள்ள - பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி - திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
