புலம்பெயர் இலங்கை பணியாளர்களுக்கான திட்டம்:ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மின்சார காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான யோசனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
Keeping my promise to those who generate foreign remittance into #LK, my request to @RW_UNP was considered favourably and requested the same in writing today. Regardless where you work if you get paid generate USD you will be entitled to a license to import an #ElectricVehicles pic.twitter.com/QEaFI7FZRr
— Manusha Nanayakkara (@nanayakkara77) September 16, 2022
இந்த பதிவில், மின்சார காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை விரைவாக ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு டொலர்களை அனுப்பும் புலம்பெயர் இலங்கை பணியாளர்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
புதிய திட்டம்
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய புலம்பெயர் தொழிலாளர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.