மட்டக்களப்பு மாநகர சபையில் சேவை பெறச் சென்ற மக்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
மட்டக்களப்பு மாநகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் குறித்து இ ஈ.பி.டிபி. கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலைமீன்மடுவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,எதிர்வரும் 20 ஆம் திகதி மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வருகை தந்து திறக்கவுள்ளார்.அதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
நடவடிக்கை
இருந்த போதும் மட்டு மாநகர சபைக்கு 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மக்கள் தமது சேவைகளை பெற சென்ற போது அங்கிருந்த ஒரு சில ஊழியர்கள் ஜனாதிபதி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகிறார். ஆதலால் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளி வேலைக்கு சென்று விட்டனர் எனக் கூறி மக்களை திருப்பி அனுப்பினர்.
அத்தோடு, எங்களால் எந்த சேவையும் செய்ய முடியாது. ஜனாதிபதி நூலக திறப்பு விழாவிற்கு வந்து போன பின்னர் வருமாறு தெரிவித்து பொது மக்களை திருப்பி அனுப்பினார்கள்.

இது தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் எரிபொருள் நிரப்பி தங்களுடைய அத்தியாவசிய சேவையை பெற வந்த மக்கள் தமது சேவையை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் ஏக்கத்துடன் வெறும் கையுடன் திரும்பி செல்கின்றனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri