அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
அரசியலமைப்பின் 21ம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இலங்கையின் மிகப் பழைமையான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் கடிதத்தில் அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்துக்கு இணக்கம் தெரிவித்தமை குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தச்சட்ட நகலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்
அத்துடன் தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்ட நகலில் சிற்சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
1. ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கும் உரிமையை ரத்துச் செய்தல்.
2. அமைச்சரவையின் எண்ணிக்கையை 20க்குள் மட்டுப்படுத்தல், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையையும் 20 ஆக வரையறுத்தல்.
3. தூதுவர்கள் மற்றும் உயர்பதவிகளுக்கான நபர்களை நியமிக்கும் போது அரசியல் அழுத்தங்கள் இன்றி பொருத்தமானவர்களை நியமித்தல்.
4. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு நிபந்தனைகளை விதித்தல் போன்றன பெப்ரல் அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளாகும்.
குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam