அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
அரசியலமைப்பின் 21ம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இலங்கையின் மிகப் பழைமையான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் கடிதத்தில் அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்துக்கு இணக்கம் தெரிவித்தமை குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தச்சட்ட நகலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்
அத்துடன் தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்ட நகலில் சிற்சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
1. ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கும் உரிமையை ரத்துச் செய்தல்.
2. அமைச்சரவையின் எண்ணிக்கையை 20க்குள் மட்டுப்படுத்தல், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையையும் 20 ஆக வரையறுத்தல்.
3. தூதுவர்கள் மற்றும் உயர்பதவிகளுக்கான நபர்களை நியமிக்கும் போது அரசியல் அழுத்தங்கள் இன்றி பொருத்தமானவர்களை நியமித்தல்.
4. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு நிபந்தனைகளை விதித்தல் போன்றன பெப்ரல் அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளாகும்.
குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam