மாற்று வழியை நாடுவோம் - ஜனாதிபதிக்கு கத்தோலிக்க ஆயர்கள் குழு எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குல் தொடர்பில் நீதி வழங்கும் செயற்பாடு திருப்தியளிக்கக்கூடிய வகையில் வௌிப்படைத்தன்மையுடன் இடம்பெறாவிட்டால், அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான தேசிய கத்தோலிக்க ஆயர்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று கடிதம் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஒரு மாதத்துக்குள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் பதில் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனத் தாம் நம்புவதாகவும் ஆயர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு பேராயருடன் ஐந்து ஆயர்கள், உதவி ஆயர்கள் உள்ளிட்ட 34 பேர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசு, சாட்சியங்களில் வௌியான தகவல்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆற்றிய உரை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குல் தொடர்பில் இதுவரை வௌியாகாத பல விடயங்களை சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam