தீவிரவாத செல்வாக்கு குறித்து ஜனாதிபதிக்கு ஞானசார தேரர் அனுப்பியுள்ள அவசர கடிதம்
இஸ்லாமிய தீவிரவாதத்தின் மூலம் பயங்கரவாதிகள் தோன்றுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அத்துடன் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அதே வழியில் அரசாங்கம் துல்லியமான மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு கோரியுள்ளது.
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் சதி மற்றும் தீவிரவாத செல்வாக்கு குறித்து ஜனாதிபதிக்கு, பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் நாட்டில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் காணுமாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இப்போது ஒரு அரசியல் பந்தாக மாறியுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிட்ட முறையில் நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.