சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்! - மனோ எம்.பி. எச்சரிக்கை
இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் ருவிட்டர் பதிவு வருமாறு,
தமிழை தவிர்த்து, சீனர் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். #சிங்களம், #தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த #சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் உள. நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கியுள்ளேன். எனினும் பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் #தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும். #lka pic.twitter.com/HbCTLdplYw
— Mano Ganesan (@ManoGanesan) May 22, 2021
தமிழைத் தவிர்த்து, சீனர்கள் மொழிச் சட்டத்தை இங்கு மீறுகின்றார்கள். சிங்களம், தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டுமுள்ள பெயர்ப் பலகைகளும் உள்ளன.
நான் சீனத் தூதுவரைச் சந்தித்து இது பற்றி விளக்கியுள்ளேன். எனினும், பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் தெருப் போராட்டம் செய்ய வேண்டி வரும் என்றுள்ளது.