நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!: வெளிவந்த காரணம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கை

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே பி எஸ் குமாரசிறி, மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல ஆகியோருக்கு எதிராகவே சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகம் ஆலோசித்து வருகின்றது.
இதற்கமைய அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய Toyota Land Cruiser வாகனமும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய Toyota Hilux வாகனமும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வாகனங்கள்

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தமையினால், வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக
தெரிவித்து குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி செயலகம் அவதானம்
செலுத்தி வருகின்றது.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan