மதமாற்றம் செய்யும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மக்களை மதமாற்றம் செய்யும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சங்க நிகாய கட்சிகளின் பதிவாளர் தலைவர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் விக்ரமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி பதிவு செய்யப்படாத சமய நிலையங்களை சோதனையிட பொலிஸ் திணைக்களத்தின் உதவியை நாடுவதற்கு அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
மதச் சீர்கேடு
மேலும், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மகாசங்கரத்ன மற்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிக்குகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், மதச் சீர்கேடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், விமான அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையில் பிக்குகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் பெயர்களை உள்ளிடும்போது, பிக்குகளுக்கு வெனரபிள் என்றும், கன்னியாஸ்திரிகளுக்கு ரெவரெண்ட் என்றும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam