நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு(Nimal Siripala de Silva) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவின் பதவி காலத்தில் காலி முகத்திடல் மைதானத்தில் உள்ள ஆறு நடமாடும் கடைகளில் பல வருடங்களாக வியாபாரம் செய்து வந்த வர்த்தகர்கள் அகற்றப்பட்டு அவர்களது ஆதரவாளர்களுக்கு வியாபார அனுமதி வழங்கப்பட்டதாக பிரதீப் சார்ள்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கமைய பல வருடங்களாக அந்த இடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் கடும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோத செயல்
எனவே இந்த சட்டவிரோத செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கடைகளை வியாபாரிகளிடம் மீட்டுத் தர அரசிடம் கோரிக்கை விடுக்கவள்ளதாகவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri