வவுனியா வடக்கு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
வவுனியா வடக்கு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வவுனியா பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வவுனியா வடக்கில் இனபரம்பலை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் குடியேற்றங்களால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இதன்போது கட்சி உறுப்பினர்களால் வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.