கொழும்பின் முன்னணி வைத்தியசாலை இருதய நோய் நிபுணத்துவ மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கொழும்பு - கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருதய நோய் நிபுணத்துவ மருத்துவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
15 வயது சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள முன்னணி வைத்தியசாலையொன்றின் 41 வயது இருதய நோய் நிபுணத்துவ மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.
குறித்த மருத்துவர் பண்டாரகமையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஈடுபடுத்தியமை மற்றும் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மாலைத்தீவின் முன்னாள் பிரதி நிதி அமைச்சர், மிஹிந்தலை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.





கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri
