அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் பலி
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியும் நேற்று (28) உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற 12 நாள் மோதலில் தனது முன்னாள் தளபதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆயுதப்படைகளை வழிநடத்தி வந்த லெப்டினன்ட் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி, சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அரை-அதிகாரப்பூர்வ ‘தஸ்னீம்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் தாக்குதல்! மத்தியக் கிழக்கு நாடுகளில் வெடிப்புச் சத்தங்கள் - இஸ்ரேல் கொடுத்துள்ள பதில்
இரு முக்கிய பிரமுகர்கள் மரணம்
மேலும், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதேவும் அதே தாக்குதலில் உயிரிழந்ததாக ‘தஸ்னீம்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) உயர்மட்டத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயலாளர் அலி ஷம்கானி ஆகியோரின் மரணத்தையும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri