ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்
மத்திய கிழக்கில் தொடர் தாக்குதல் சத்தங்கள் கேட்டு வரும் நிலையில் அயதுல்லா அலி கமெனியின் படுகொலை ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கமெனியின் மகன் மொஜ்தபா புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமைக்கப்படும் குழு
நாட்டை தற்காலிகமாக வழிநடத்த ஜனாதிபதி மசூத் பெஷ்கியான் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் கொண்ட வல்லுநர் குழு விரைவில் கூடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தக் குழுவே புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இதுவரை இல்லாத அளவுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

மோதல் தீவிரமடையும் அச்சம்
இதனால் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதல் மேலும் தீவிரமடையும் என அச்சம் நிலவுகிறது.
இதேவேளை துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் தலைநகர் தோஹாவின் மேல் வானில் இன்று (01) இரண்டாவது நாளாகவும் பலத்த வெடிச்சத்தங்களை கேட்க முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துபாய் முழுவதும் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri