மகிந்த, ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்தவை கைது செய்ய வேண்டும்:சட்டத்தரணிகள் முறைப்பாடு

Sri Lanka Police Johnston Fernando Mahinda Rajapaksa Sri Lanka Magistrate Court Bar Association of Sri Lanka
By Steephen May 10, 2022 09:14 AM GMT
Report

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை குற்றவியல் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து,நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, சட்டத்தரணிகள் சிலர் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்கள், காலிமுகத் திடல், அலரி மாளிகைக்கு எதிரில்  அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டகார்கள் மீது மதுபோதையில் சட்டவிரோதமான முறையில் ஒன்றுக்கூடி தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தமை, அச்சுறுத்தல் சதித்திட்டம் தீட்டி, அதற்கு அனுசரணை வழங்கியனர் என சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஜனநாயக சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் சட்டத்தரணி கமல் விஜேசிறி, சட்டத்தரணி துசித குணசேகர, சட்டத்தரணி ரஜித் லக்மால், சட்டததரணி நிஷாந்தி வெத்தசிங்க உள்ளிட்டோர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் பேரை பேருந்துகளில் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு பிரதமர் உரையாற்றிய பின்னர், ஒரு மாதத்திற்கு மேல் மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆகிய இடங்களில் அமைதியான போரட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கைதிகளை கலவரம், குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கு எதிராக இலங்கை குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் சட்டத்தரணிகள், பொலிஸ் திணைக்களத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US