22வது திருத்த சட்டம் தொடர்பில் ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு அதிருப்தி
அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தில் உள்ள பல சாதகமான அம்சங்கள் 22வது திருத்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி விஜேநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
22வது திருத்த சட்டம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“19வது திருத்த சட்டத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவான பலனை தரக்கூடிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் 22ஆவது திருத்த சட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.
மேலும் இந்த செயல்முறையானது, அதிகாரத்தை பிடிப்பதற்கு ஜனாதிபதியின் அதிகார போராட்டமாக மாறியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை

இதேவேளை,19வது திருத்த சட்டத்தின் விதிகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri