சங்கு சின்னம் குறித்த அரசியல் நிலைப்பாடு: குற்றம் சுமத்து சட்டத்தரணி சுகாஷ்
சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்றையதினம் (03) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும்,
"நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டது. சங்குச் சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாகியது.
நாடாளுமன்றத் தேர்தல்
எங்கள் முடிவுகள் கொள்கையின் அப்பாற்பட்டதே தவிர மதுபான அனுமதிப்பத்திரங்களையோ வேறு சலுகைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது.

அன்புக்குரிய மக்களே, நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தடம் மாறாத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளே தமிழினத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் என்பதைப் பொறுப்போடு பதிவு செய்கின்றோம்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri