பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் - சட்டத்தரணி சுகாஸ்

Government Sri Lanka Law Rizad Badudeen Kanagaratnam Sugash
By Independent Writer Jul 19, 2021 10:17 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு, குரல் கொடுப்பது மட்டுமின்றி சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையைப் பொறுத்த வரை பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது ஒரு குழப்பகரமான வியாக்கியானங்களை கொண்ட அல்லது பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை திட்ட வட்டமாகச் சட்ட ரீதியாக வரையறுக்காத ஒரு சட்ட ஏற்பாடாகவே காணப்படுகின்றது.

பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது இலங்கை அரசினுடைய அல்லது இலங்கை அரசை பல்வேறு பட்ட காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த, பல்வேறுபட்ட அரசாங்கங்களினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக செயல்படுகின்றவர்களை அல்லது அரசாங்கங்களினுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருந்தவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகத் தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்க முடியும்.

ஏனென்றால், இலங்கையிலே நடைபெற்றது ஒரு பயங்கரவாதம் கிடையாது. அது ஒரு இனம், தன்னுடைய விடுதலையை வலியுறுத்தி சர்வதேச சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் விடுதலைக்காக செயல்படுவது பயங்கரவாதம் ஆகாது.

அந்தவகையில் இலங்கையிலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதாவது இன்று சிறைகளிலே நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படாது அல்லது ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிவடையாது எப்பொழுது தங்களுடைய வழக்குகள் முடிவடையும் என்பது கூடத் தெரியாது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

2009ஆம் ஆண்டுக்குப் பின் பயங்கரவாதம் இல்லை. அல்லது பயங்கர வாதத்தை நாங்கள் முறியடித்து விட்டோம் என்று இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தது உண்மை.

ஆனால் 2009இற்குப் பின்னர் நான் மேலே குறிப்பிட்ட வாறு, தங்களுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறாக செயல் படுகின்றவர்களை அடக்குவதற்கு தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் விரும்பியோ, விரும்பாமலோ கொண்டு வருவதற்கான ஒரு உத்தியாக, ஒரு சாதனமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பது தான் உண்மை.

இன்று தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமின்றி, ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் தலைவர்களும் சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இது இலங்கை அரசும், அரசை ஆளுகின்ற அரசாங்கமும் தங்களினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவர்களை அல்லது ஏற்காதவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது என்பதற்கு மிகச்சிறந்த ஆதாரம் இது.

இதற்கான தீர்வுகள் என்று வருகின்ற பொழுது, முற்று முழுதான ஒரு சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையிலே நடைபெற்ற இனப் படுகொலைக்கு நடக்கின்ற பொழுது அங்கு இலங்கை அரசை வழிக்கு கொண்டு வருவதற்காக, இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை, முற்றாக நீக்க வேண்டும் என்கின்ற ஒரு பேரம் பேசலை, அல்லது ஒரு நிபந்தனையை விதிக்க முடியும்.

அல்லது இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்களின் ஊடாக வழங்கப்படுகின்ற அழுத்தங்களின் ஊடாக இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தான் ஒரே தீர்வு.

ஆகவே, இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு, நீக்குவதற்கு, ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்று பட்டு குரல் கொடுப்பது மட்டும் தீர்வைத் தராது. அதையும் தாண்டி சர்வ தேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். 

9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US