பெல்மடுல்ல பகுதியில் பெண் சட்டத்தரணியொருவர் சடலமாக மீட்பு
பெல்மடுல்ல பகுதியில் பெண் சட்டத்தரணியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புலத்வெல்கொட பகுதியில் அவரது வீட்டின் அறையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
40 வயதான சட்டத்தரணியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மரணத்தில் சந்தேகம்
குறித்த பெண் சட்டத்தரணியின் கணவர் சம்பவ தினத்திற்கு முதல் நாள் இரவிலிருந்து வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் சட்டத்தரணி இறுதியாக உறவினர் ஒருவருக்கு அனுப்பி வைத்த குறுஞ்செய்தி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.