லோரன்ஸ் மலையக அரசியல் ஆளுமை: அருட்தந்தை மா.சக்திவேல் இரங்கல்
நண்பர் லோரன்ஸ் மலையக அரசியல் ஆளுமை என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (01.06.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலையக தமிழர்கள் இந்நாட்டில் 200 ஆண்டு கால வரலாற்றை நிறைவு செய்து அடுத்த நூற்றாண்டை நோக்கிய பயணிக்கவுள்ளது.
மலையக அரசியல் கனவு
இந்நிலையில் மலையக அரசியலின் கலங்கரை விளக்கமாக அரசியல் திசை காட்டியான ஆளுமைகளின் ஒருவரான நண்பன் லோரன்ஸ் அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் உறவுத் தோழர்கள் அனைவருக்கும் மலையக மக்களின் மாண்பை காக்கும் அமைப்பு தனது தோழமையுள்ள அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவரது அரசியல் வழியில் பயணிப்பதே காலத்தின் கட்டாயமாக ஏற்று மலையக விடியலுக்கு வித்திடுவது எமது பொறுப்பாக அமையும் என்பதை கூற விரும்புகின்றது.
"தியாகங்கள் செய்யக் கூடியவர்களுக்கு மட்டுமே அரசியலில் வித்தாக முடியும்" அந்த வகையில் மலையக மண்ணின் அரசியலுக்கு மக்களின் இருப்பிற்கு தம்மை அர்ப்பணித்த அரசியல் ஆளுமையே மறைந்த நம் நண்பர்.
மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் எனும் பதத்திற்குள் அடக்கி விட முடியாது. அடக்கவும் கூடாது. அவ்வாறு அடக்குவது மலையக மக்களுக்கு எதிராக புரியும் அரசியல் அநீதி மட்டுமல்ல, துரோகமுமாகும் என்பதில் மறைந்த நம் நண்பர் தெளிவாக இருந்தார்.
இந்தியாவில் வாழும் மக்கள் தாம் வாழும் மாநிலத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
மலையகத்தின் அரசியல் காவலர்கள்
அந்தவகையில் மலையக தேசத்தின் சிற்பிகள் மலையகத்தவர் அடையாளத்துடனேயே வாழ வேண்டும் என்று கனவு கண்டவர். அத்தோடு தனது கனவு காண அரசியல் வழி வரைபடத்தை வரைந்து மக்கள் முன்வைத்துள்ளார்.
மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதோடு அவர்களின் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்க புவிசார் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டும் அதன் மூலம் பொருளாதாரம் இவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை எல்லாம் ஆழ சிந்தித்து எழுத்து வடிவில் வழிகாட்டியதோடு அதற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்தார்.
மலையகத்தின் அரசியல் காவலர்கள் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டவர்களால் மலையக அரசியல் தடம் புரண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. அதன் வேதனையோ என்னவோ அவர் எம்மை விட்டு பிரிந்துள்ளார்.
நண்பர் லோரன்ஸ் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்போர் இறுதி சடங்கில் கலந்துகொள்வோர் அவரது அரசியல் கனவிற்கும் அதற்கான அரசியல் வரைபடத்திற்கும் இறுதி கடன் செலுத்துவதற்கு இடம் அளிக்கக் கூடாது அது பாரிய சவால்.
நண்பர் லோரன்ஸ் மலையக மக்கள் முன்னணியின் வித்தகர்களில் முக்கியமானவர். அதன் காவலர் மலையக அரசியலுக்கும் உரித்தாளர் அவர் மலையக அரசியல் வரலாற்றில் தடம் பதித்து அவ் வரலாற்றோடு பயணிக்கும் பொறுப்பை காலத்தின் கட்டாயமாக்கியுள்ளார்.
அவரின் மலையக அரசியல் கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றி மலையக மக்களை புதிய நூற்றாண்டை நோக்கி அழைத்து சென்றல் மட்டுமே மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்க முடியும். அதுவே நம் தோழருக்கான வாழ்வு கடனாக அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
