இசைப்பிரியா - பாலச்சந்திரன் மரணம் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்- அமைச்சர் அதிரடி
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்(Lasantha Wickrematunge) வாகன ஓட்டுநர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் சட்டமா அதிபரின் முடிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் அதேநேரம் தமிழர் தாயகங்களில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரண செய்திகெட்டு தான் துயரமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்(Saroja Savithri Paulraj) குறிப்பிட்டுள்ளார்.
இதுவொரு இலகுவான விடயம் அல்ல என்றும் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam