தாஜூடீன் - லசந்த கொலைகள் குறித்த விசாரணைகளில் சிக்கல்! ஜனாதிபதி அறிவிப்பு
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன்(Wasim Thajudeen) மற்றும் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க(Lasantha Wickrematunge) ஆகியோரது கொலைகள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகள் இடம்பெற்று நீண்ட காலம் என்பதனால் விசாரணைகளை மேற்கொள்வதில் நெருக்கடி நிலைமைகளை சந்திக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையாளர்கள் அசௌகரியம்
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 16 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் விசாரணையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் தற்பொழுது உயிருடன் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய சட்ட வைத்திய அதிகாரியும் மரணித்து விட்டார். எவ்வாறெனினும் விசாரணைகளில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri