அமைச்சர்கள் பயன்படுத்திய வானூர்திகளுக்கு செலுத்தப்பட வேண்டிய பெருந்தொகை பணம்
முன்னாள் அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பயணங்களை மேற்கொள்ள வாடகைக்கு பெற்றுக்கொண்ட உலங்குவானூர்திகளுக்காக இலங்கை விமானப்படைக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடியே 25 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சுக்கள் உட்பட 10 அரச நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் இவ்வாறு பணத்தை செலுத்தவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கை விமானப்படையிடம் 2003 முதல் 2013 ஆம் ஆண்டு இடையிலான காலத்தில் பெற்றுக்கொண்ட வானூர்திகளுக்காக 60 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெற்றுக்கொண்ட வானூர்திகளுக்காக மேலும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை செலுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இநத பணம் இதுவரை விமானப்படையினருக்கு செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்திற்காக கிடைக்க வேண்டிய 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தொடர்பில் விசாரணை நடத்தி, அறவிடப்பட வேண்டிய நிலுவை பணம் தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறுப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமானப்படையிடம் இருந்து 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வானூர்திகளுக்கு செலுத்த வேண்டிய மேலும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை அறவிடுவது தொடர்பான அறிக்கையை நிதியமைச்சிடம் வழங்க தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பணத்தை நிதியமைச்சு ஊடாக அறவிட்டு, அதனை விமானப்படையினருக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri