இராணுவத்தினரால் பெருந்தொகை மஞ்சள் மீட்பு
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் நேற்று(07) கைப்பற்றியுள்ளனர்.
இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கடத்தல் நடவடிக்கை
இதன்போது, 36 பாரிய மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ கிராம் மஞ்சளை இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்ட மஞ்சள் ஜெயபுரம் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.



