மன்னாரில் வைத்தியரிடமிருந்து பெருந்தொகை பணம் கொள்ளை (PHOTO)
மன்னார்- நானாட்டான் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் நேற்றையதினம் (07.05.2023) வைத்தியரின் தனியார் மருந்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மருந்தக வளாகத்தினுள் நுழைந்த இரண்டு சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் வைத்தியரை மிரட்டி 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வைத்தியரால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
