அம்பாந்தோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை டீசல் மீட்பு: நால்வர் கைது
அம்பாந்தோட்டையில் பெருமளவில் பதுக்கி வைத்திருந்த எரிபொருட்கள் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் இருந்தே இன்று(10) எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறப்பு அதிரடி படையினரால் 19,000 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
இந்த பதுக்கலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கு டீசலை கடத்துதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.