முல்லைத்தீவில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு மடிக்கணினி வழங்கிவைப்பு
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் நேற்று (3) பி.ப 1.20 மணியளவில் வழங்கிவைத்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பங்களிப்பில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவுக்கு வழங்கப்பட்ட கணினிகள் இவையாகும்.
அபிவிருத்திப் பிரிவு
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு இந்த மடிக்கணினி வழங்கிவைக்கப்பட்டது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தரவுகளை சேகரித்தல், ஆய்வுக்குட்படுத்தல் முதலான செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளும் பொருட்டு இந்த மடிக்கணினி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் முயற்சியாண்மை பயிற்சி உத்தியோகத்தர் உ.தேவமலர் கலந்துகொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |