உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறும் இலங்கை! ஐ.நா புகழாரம்
பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இருந்து மிக வேகமாக இலங்கை மீண்டெழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது.
உலகில் சுமார் 20 நாடுகள் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதில் இலங்கை விரைவாக மீண்டெழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் மார்க் அன்றே பிரான்ச் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் நாயகமும் இலங்கை தொடர்பில் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய போதே மார்க் அன்றைய பிரான்ச் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri